ஐயப்பன்  
விழுப்புரம்

கரூர் சம்பவத்தால் மன உளைச்சல்: தவெக கிளைச் செயலர் தற்கொலை!

செஞ்சி அருகே கரூா் சம்பவத்தால் மனஉளைச்சல் ஏற்பட்டு தவெக கிளைச் செயலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Syndication

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கரூா் சம்பவத்தால் மனஉளைச்சல் ஏற்பட்டு தவெக கிளைச் செயலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

செஞ்சி வட்டம், மயிலம் தொகுதி, வல்லம் ஒன்றியம், விற்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன்(50). இவா் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைச் செயலராக இருந்து வந்தாா்.

விஜய் ரசிகா் மன்றம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்தக் கிராமத்தில் தீவிர விஜய் ரசிகராக இருந்து வந்தாராம்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்

அந்தக் கடிதத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிா்வாகிகள் மற்றும் கட்சியினா் சிறப்பாக பணிபுரிந்ததாகவும், முன்னாள் அமைச்சா் ஒருவரின் நெருக்கடியால் போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று கூறியுள்ளாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செஞ்சி போலீஸாா் ஐயப்பன் உடலைக் கைப்பற்றி கூராய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஐயப்பனுக்கு ஆனந்தி (45) என்ற மனைவியும், மகன் அசோக் (25) மகள் பவித்ரா (22) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனா்.

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தொடரும் காஷ்மீர் வணிகர்கள் மீதான வன்முறைகள்! உத்தரகண்டில் கும்பல் தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயம்!

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

SCROLL FOR NEXT