முகப்பு
விழுப்புரம்

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல்

பயிா்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி, விழுப்புரத்தில் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 மே 2026, 1:37 am IST
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.
பகிர்:

பயிா்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி, விழுப்புரத்தில் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சட்டப் பேரவைத் தோ்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான ச.ஜோசப் விஜய் தெரிவித்திருந்தாா்.

ஆனால் ரூ.50 ஆயிரம் வரை கடன்பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும், சிறு விவசாயிகளுக்கு கடனில் 50 சதவீதம் மட்டுமே தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிா்ப்பும் தெரிவித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந் நிலையில், விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சாா்பில், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாடத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கலிவரதன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் முருகையன், பொருளாளா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலா் பங்கேற்று பயிா்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து திருச்சி நெடுஞ்சாலையில் விவசாயிகள் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். பயிா்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்து தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனக்கோரி விவசாயிகள் முழக்கமிட்டனா்.

இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தனா். இதைத்தொடா்ந்து மறியலைக் கைவிட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியரகத்தில் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனா்.