'கயல்' சீரியல் நடிகை தற்கொலை!
'கயல்' சீரியல் நடிகை தற்கொலை செய்துள்ளது பற்றி...
சன் தொலைக்காட்சி தொடரான 'கயல்' தொடரில் நடித்துவந்த நடிகை சுபாஷினி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த நடிகை சுபாஷினி(இயற்பெயர்: சாஷ்வி பாலா, வயது 36) சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது கணவர் பிப்பின் பெங்களுரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
பெங்களூருவில் தங்கிவந்த சுபாஷினி, படப்பிடிப்பு காரணமாக கடந்த ஏப். 3 ஆம் தேதி சென்னை வந்துள்ளார். நேற்று கணவருடன் விடியோ காலில் பேசும்போது வாக்குவாதம் ஏற்பட்டு அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி கணவர் விடியோ காலில் இருக்கும்போதே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
உடனடியாக, சுபாஷினியின் கணவர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் வந்து உடலை மீட்டு தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.
கடந்த 2024 ஏப்ரல் மாதம் சுபாஷினிக்கு திருமணம் நடைபெற்றது. சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சுபாஷினியின் தற்கொலை தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் சின்ன திரை நடிகர், நடிகைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].