அடுத்த வருடம் திருமணம்: அறிவித்த நாக சைத்தன்யா!
தன்னுடை ய திருமணம் அடுத்த வருடம் நடைபெறும் என்று இளம் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யா அறிவித்துள்ளார்.
தன்னுடை ய திருமணம் அடுத்த வருடம் நடைபெறும் என்று இளம் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யா அறிவித்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைத்தன்யா தன்னுடைய திருமணம் பற்றி அறிவிப்பு ஒன்றை செய்துள்ளார்,.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
திருமணம் அடுத்த வருடம் நடைபெறும். தேதி முடிவானதும் அப்பா அதை முறைப்படி அறிவிப்பார். இப்போதைக்கு நான் வேறெந்த தகவலும் பகிர்ந்து கொள்ள இயலாது என்று அவர் தெரிவித்தார்.
நடிகை சமந்தாவுடனான உறவு குறித்து கேட்ட பொழுதுஅவர் பதில் அளிக்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.