பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கைது!
பாலிவுட் நடிகையான ராக்கி சாவந்த், பஞ்சாப் காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட் நடிகையான ராக்கி சாவந்த், பஞ்சாப் காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமாயணம் நூலை எழுதிய வால்மீகி குறித்து ராக்கி சாவந்த் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார். இது இந்துக்களின் மனத்தைப் புண்படுத்துவதாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பலமுறை ராக்கி சாவந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து லுதியானா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்நிலையில் நடிகை ராக்கி சாவந்த் பஞ்சாப் காவல்துறையினரால் மும்பையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.