செய்திகள்

பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா!

IANS

தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய இருவரும்தான் 2017-ம் ஆண்டு பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்த இரண்டு நடிகைகள் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஒரு படத்தில் நடிக்க தீபிகாவின் 11 மில்லியன் டாலர்கள் சம்பளம் பெறுகிறார் என்றும் அவரது காதலர் ரன்வீர் சிங் 10 பில்லியன் டாலர்கள் பெறுகிறார் என்கிறது ஃபோர்ப்ஸ். தீபிகாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர்கள் இருவரும் முறையே ஆறாம் மற்றும் ஏழாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

SRK, கிங் கான், பாலிவுட் பாட்ஷா என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்படும் ஷாரூக் கானின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 38 பில்லியன் டாலர்கள்! அவர் தான் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட டாப் 10 சம்பள வரிசைப் பட்டியலில் முதலிடம் வகிப்பவர். அவரைத் தொடர்ந்து சல்மான் கான் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவருடைய சம்பளமானது 37 பில்லியன் டாலர்களாம்.

கான்களைத் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் இருப்பவர் அக்‌ஷய். பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுப்பதில் இவரும் முக்கியமானவர். சமீபத்தில் அக்‌ஷய் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘டாய்லெட் - ஏக் ப்ரேம் கதா’ இதற்குச் சான்று. 

அமீர் கான் இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஹ்ருதிக் ரோஷன் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தவர்கள் தான் தீபிகா, பிரியங்கா மற்றும் ரன்வீர் சிங்.

மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் தற்போதைய சம்பளம் 9 மில்லியன் டாலர்கள். இவர் ஒன்பதாம் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பத்தாம் இடத்தைப் பிடித்தவர் ரன்பீர் கபூர்.

மேற்கூறிய பட்டியல் அந்தந்த நடிகர்களின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களைப் பொருத்து அமைந்துள்ளது என்றும் இவர்கள் நடித்த படங்கள் சக்கைப் போடு போட்டு ஜூன் 1 2016 லிருந்து ஜுன் 1, 2017 வரை மொத்தமாக 183 மில்லியன்கள் டாலர்களைக் குவித்துள்ளது என்றும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT