முகப்பு
செய்திகள்

மோடி என்னை நெகிழவைத்து விட்டார்: வைரமுத்து

சூரியன் - தாமரை சந்திப்பு என்று இதை அரசியலாக்க வேண்டாம்; இது நாகரிகம். ..

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

தினத்தந்தி நாளிதழின் பவளவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்தார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் இன்று காலை நடைபெற்ற பவள விழாவில் மோடி பங்கேற்றார். பிறகு திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார். 

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

கலைஞரைத் தேடிப் போய் நலம் கேட்ட மோடி என்னை நெகிழவைத்து விட்டார். சூரியன் - தாமரை சந்திப்பு என்று இதை அரசியலாக்க வேண்டாம்; இது நாகரிகம். இந்திய அரசியல் பொதுவெளியில் தொடரவேண்டும் இந்தப் பண்பாடு என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.