முகப்பு
செய்திகள்

பிகில் முதல் காட்சி: கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் ரகளை

கிருஷ்ணகிரியில் சிறப்புக் காட்சியைத் நள்ளிரவில் 1 மணிக்கே திரையிடக் கோரி ரசிகர்கள் ரகளை செய்தார்கள்.

Updated On : 25 அக்டோபர், 2019 at 11:27 AM
பகிர்:

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. பிகில் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் கால அளவு 2 மணி நேரம் 58 நிமிடம் 59 நொடி என சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு நேற்றிரவு அரசு அனுமதி வழங்கியது.

இதனால் இன்று காலை 5 மணி முதல் தமிழகம் முழுக்க பிகில் படத்தின் சிறப்புக் காட்சி தொடங்கியது. ஆனால் கிருஷ்ணகிரியில் சிறப்புக் காட்சியைத் நள்ளிரவில் 1 மணிக்கே திரையிடக் கோரி ரசிகர்கள் ரகளை செய்தார்கள். கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் இருந்த போலீஸ் தடுப்புகளையும் சிசிடிவி கேமராக்களையும் உடைத்தார்கள். கற்களை வீசித் தாக்கியதால் காவலர்கள் ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை விரட்டியடித்தார்கள். இதையடுத்து விஜய் ரசிகர்கள் 30 பேரிடம் காவலர்கள் விசாரணை செய்து வருகிறார்கள். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.