செய்திகள்

ரிஷி கபூரின் மகள் தில்லியிலிருந்து மும்பைக்குச் செல்ல அனுமதி

DIN

ரிஷி கபூருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவருடைய மகளான ரித்திமா கபூர், தில்லியிலிருந்து மும்பை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் இன்று காலமானார். அவருக்கு வயது 67.

2018-ல் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் ரிஷி கபூர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரிஷி கபூர் அமெரிக்காவின் நியூயார்க்கில் புற்றுநோய் சிகிச்சையை முடித்துக் கொண்டு, மும்பைக்கு திரும்பினார். ரிஷி கபூருடன் அவரது மனைவியும், நடிகையுமான நீத்து கபூரும் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ரிஷி கபூருக்கு சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது ஷாருக் கான், ஆலியா பட், ஆமிர் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அனுபம் கெர், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் மும்பையில் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து வந்த ரிஷி கபூர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

மறைந்த ரிஷி கபூரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதையடுத்து தனது தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக ரிஷி கபூரின் மகளான ரித்திமா கபூர், தில்லியிலிருந்து மும்பை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் ரித்திமா கபூருடன் இணைந்து மும்பைக்குச் செல்ல நால்வருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தில்லி காவல் துணை ஆணையர் (தென் கிழக்கு) ஆர்பி மீனா தகவல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடங்கத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடவு ஆட்சியா் தொடங்கி வைப்பு

நில வழிகாட்டி மதிப்பை சீரமைக்க ஆலோசனைக் கூட்டம்

வனப்பகுதியில் ஆடுகளை மேய்க்க அனுமதி கோரி இருளா்கள் மனு

வெள்ளோலையில் மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்கக் கோரி மனு

புகாருக்கு இடமளிக்காதவாறு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்: ஆட்சியா்

SCROLL FOR NEXT