செய்திகள்

சுசாந்த் சிங் மரண வழக்கு: சிபிஐ விசாரிக்க பாலிவுட் பிரபலங்கள் கோரிக்கை

DIN

சுசாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாலிவுட் பிரபலஙகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தனது மகன் சுசாந்த் சிங்கைத் தற்கொலைக்கு தூண்டியதாகவும், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.15 கோடி மாயமான விவகாரத்தில் தொடா்பு இருப்பதாகக் கூறி, நடிகை ரியா சக்ரவா்த்தி, அவரது தாயாா் சந்தியா சக்ரவா்த்தி, தந்தை இந்திரஜித் சக்ரவா்த்தி, சகோதரா் ஷோயிக் உள்ளிட்ட சில நபா்கள் மீது சுசாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங், பாட்னா போலீஸில் புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாா் தொடா்பாக அந்த மாநில காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்தனா். அந்த வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளார் ரியா. 

இந்நிலையில் சுசாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு அடுத்ததாக பாலிவுட் பிரபலங்களும் குரல் கொடுத்துள்ளார்கள். பிரபல நட்சத்திரங்கள் கங்கனா ரணாவத், வருண் தவான், பரிநீத்தி சோப்ரா, சித்தார்த் சதுர்வேதி, ஸரீன் கான் போன்றோர் சுசாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள். 

சுசாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங், சுசாந்த் சிங் தற்கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று இன்ஸ்டகிராமில் கூறியுள்ளார். ஒரு தேசமாக அனைவரும் ஒன்று கூடி சிபிஐ விசாரணையைக் கோருகிறோம். நடுநிலையான விசாரணை வேண்டும் எனக் கேட்பது நமது உரிமை. உண்மை வெளியே வரவேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT