செய்திகள்

அனைவரும் முகக்கவசம் அணியுங்கள்: அபிஷேக் பச்சன் வேண்டுகோள்

DIN

அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படி நடிகர் அபிஷேக் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் அபிஷேக் பச்சனுடன் அவரது தந்தை அமிதாப் பச்சனுக்கும் கரோனா நோய்த்தொற்று உறதி செய்யப்பட்டது. பின்னா் அபிஷேக்கின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வா்யா ராய், அவா்களது மகள் ஆராத்யா ஆகியோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். அவா்கள் அனைவருமே மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

ஐஸ்வா்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோா் கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், கடந்த மாதத் தொடக்கத்தில் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் குணமடைந்து வீடு திரும்பினார்கள். 

கரோனாவிலிருந்து சமீபத்தில் மீண்ட பிரபல நடிகர் அமிதாப் பச்சன், கோன் பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். தானும் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அபிஷேக் பச்சன் கூறினார். இந்நிலையில் ட்விட்டரில் அவர் கூறியதாவது:

அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT