தேசிய விருது பெற்ற இயக்குநரை விரைவில் மணக்கிறார் நடிகை அனுஷ்கா?
தேசிய விருது பெற்ற இயக்குநரை நடிகை அனுஷ்கா காதல் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகுபலி நட்சத்திரம் பிரபாஸைக் காதலிக்கிறார் என்று முதலில் செய்திகள் வெளியாகின. பிறகு கிரிக்கெட் வீரரைக் காதலிக்கிறார் எனவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குநரை நடிகை அனுஷ்கா காதல் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை ஊடகங்களில் வெளியான தகவலின்படி, இஞ்சி இடுப்பழகி படத்தை இயக்கிய பிரகாஷ் கோவலமுடியைத் திருமணம் செய்ய அனுஷ்கா திட்டமிட்டுள்ளார் எனத் தெரிகிறது.
பிரகாஷ் கோவலமுடி 2004-ல் இயக்கிய பொம்மலடா படம், சிறந்த தெலுங்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. இவர், மூத்த தெலுங்கு இயக்குநர் ராகவேந்திர ராவின் மகன். இஞ்சி இடுப்பழகி (தெலுங்கில் சைஸ் ஜீரோ) படப்பிடிப்பின்போதுதான் அனுஷ்கா - பிரகாஷ் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. பாலிவுட் திரைக்கதை ஆசிரியர் கனிகா தில்லானை 2014-ல் திருமணம் செய்துள்ளார் பிரகாஷ். எனினும் 3 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் பிரிந்து வாழ்வதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
Advertisement
இந்நிலையில் அனுஷ்கா - பிரகாஷ் இடையிலான காதல் திருமணம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.