செய்திகள்

இந்தக் காரணத்தால் 'பீஸ்ட்' படம் கரூரில் வெளியாகாது - ரசிகர்கள் அதிர்ச்சி

பீஸ்ட் திரைப்படம் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திரையரங்குகளில் வெளியாகாது என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 

DIN

பீஸ்ட் திரைப்படம் நாளை (ஏப்ரல் 13) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்தைக் காண ஆவலாக காத்திருக்கின்றனர். நிறைய திரையரங்குகளில் முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கரூர் மாநகராட்சியில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகாது என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. திரையங்க உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பான பிரச்னையின் காரணமாக இந்த முடிவை கரூர் திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ளனர். 

பீஸ்ட் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இந்திய அளவில் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT