அதிமுகவில் முறையாக இணைந்து செயல்படப் போவதாக இயக்குநர் கே.பாக்யராஜ் அறிவித்துள்ளார்.
இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் இன்று சென்னையில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து தன் ஆதரவைத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: அதிமுக அலுவலக கலவரம்: ஓ.பி.எஸ். மீது 7 பிரிவுகளில் வழக்கு
சந்திப்பிற்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், ‘அதிமுகவில் நான் இணைந்து செயலாற்ற உள்ளேன். எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தபோது கட்சி எப்படியிருந்ததோ அப்படி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே என் ஆசை. எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கட்சியைப் பலப்படுத்துவது குறித்து ஆலோசிப்பேன். எம்.ஜி.ஆரின் பெயரைக் காப்பாற்றவும் அதிமுகவை ஒருங்கிணைக்கவும் என்னால் முடிந்தவற்றை செய்துகொண்டே இருப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.