பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மரணம்: பிரபலங்கள் இரங்கல்
பிரபல பாடலாசிரியர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரேம்ஜியின் இசையில் ஜெய் நடித்த அதே நேரம் அதே இடம் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் லிலித் ஆனந்த். இந்தப் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் ரசிகர்களின் மத்தியில் கவனம் பெற்றார்.
தொடர்ந்து மாநகரம், வடகறி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, அஞ்சல, காஷ்மோரா, ஜுங்கா போன்ற படங்களில் பாடல் எழுதியுள்ளார். குறிப்பாக இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இடம்பெற்ற என் வீட்டுல பாடல் பெரிய வெற்றி பெற்றது.
இதையும் படிக்க | பீஸ்ட் அரபிக் குத்து பாட்டுக்கு மனைவியுடன் இயக்குநர் அட்லி நடனம்: செமையா ஆடுறாரே
Advertisement
Advertisement
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட லிலிதா ஆனந்த் மருத்துவனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) உயிரிழந்தார். அவருக்கு வயது 47.
அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் விஜய் சேதுபதி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.