விக்ரம் படப்பிடிப்பு காரணமாக தன்னால் பிக்பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்க முடியவில்லை எனக் கூறி நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் விலகினார். இதனையடுத்து மீதமிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
கமல்ஹாசன் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் இருந்தபோது அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தற்போதும் அவரே தொகுத்து வழங்குவார் என்றும் ஒரு தகவல் பரவியது.
இதையும் படிக்க | 'வலிமை' பட முதல் காட்சி: பிரேம்ஜிக்காக வெங்கட் பிரபுவிடம் பரிந்துரைக்கும் கங்கை அமரன்
இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு அல்லது சரத்குமார் தொகுத்து வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது. அதரற்கான பேச்சவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறதாம். விரைவில் இருவர் ஒருவர் தொகுத்து வழங்குவார்கள் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.