செய்திகள்

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கு: ஹரி நாடார் கைது

DIN

நடிகை விஜயலட்சுமி கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயன்ற வழக்கில் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன்னை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் உள்ளிட்டோர் மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து திருவான்மியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஹரி நாடார் பண மோசடி வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் இருக்கிறார். இதனையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையின் அனுமதியின் பேரில் ஹரி நாடாரை கைது செய்துள்ளனர். 

இதனையடுத்து திருவான்மியூர் காவல்துறையினர் நாளை (ஜனவரி 20 ) ஹரி நாடாரை சைதாப்பேட்டை  குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT