செய்திகள்

நடிகர் துல்கர் சல்மானுக்கு கரோனா தொற்று

DIN

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல மலையாளத் திரைப்பட நடிகர் துல்கர் சல்மானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவர் தனது சுட்டுரைத் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ள நிலையில் வீட்டுத் தனிமையில் உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“இந்த பேரிடர் இன்னும் முடியவில்லை. நாம் கவனமுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்” எனவும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார். 

நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். தமிழில் வாயை மூடிப் பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT