செய்திகள்

இரவின் நிழல் படத்தில் பார்வதியாக களமிறங்கும் சாய் பிரியங்கா

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் படத்தில் பார்வதி என்ற கதாப்பாத்திரத்தில் சாய் பிரியங்கா நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் படத்தில் பார்வதி என்ற கதாப்பாத்திரத்தில் சாய் பிரியங்கா நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம் வருகிற ஜூலை 15 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படம் உலகின் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாகும். 

உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் 

அதாவது கேமரா ஆன் செய்து மறு முறை ஆஃப் செய்யும் வரை படமாக்கப்படுவது ஒரு ஷாட். பொதுவாக படங்களில் ஒரு காட்சிக்கு ஏகப்பட்ட ஷாட்கள் படமாக்கப்படும். ஆனால் இரவின் நிழல் படம் ஒட்டுமொத்தமாக நூறு நிமிடங்கள் கட்டே இல்லாமல் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. 

இப்படி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படங்கள் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியிருக்கின்றன. ஆனால் இந்தப் படம் காட்சிகள் ஒரே நேர்கோட்டில் இல்லாமல், முன், பின் என வருமாறு படமாக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இந்தப் படம் உலகின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாய் பிரியங்கா ரூத்

இந்த நிலையில் இந்தப் படத்தின் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் போஸ்டர் மூலம் பார்த்திபன் அறிமுகப்படுத்திவருகிறார். ஏற்கனவே பிரிகிடா, வரலட்சுமி, ரோபோ ஷங்கர் ஆகியோரின் கதாப்பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது சாய் பிரியங்கா ரூத் இந்தப் படத்தில் பார்வதி என்ற வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இரவின் நிழல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT