செய்திகள்

''நான் விலகுகிறேன். எனக்கு வேறு வழியில்லை'' - அதிரடியாக அறிவித்த ரோஜா தொடர் நாயன்

ரோஜா தொடரிலிருந்து விலகுவதாக அதன் நாயகன் சிபு சூர்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

DIN

ரோஜா தொடரிலிருந்து விலகுவதாக அதன் நாயகன் சிபு சூர்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

ரோஜா தொடரில் அர்ஜூன் என்ற வேடத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சிபு சூர்யன். அர்ஜுன் சார் என நாயகி அவரை அழைப்பது ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக  ஒளிபரப்பாகும் இந்தத்தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிலையில் இந்தத் தொடரின் நாயகன் சிபு திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''எல்லோருக்கும் வணக்கம், நான் ரோஜா தொடரிலிருந்து விலகுகிறேன். ஆகஸ்ட் மாதம் எனது படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்கிறேன். ஆழ்ந்த யோசனைக்கு பிறகே இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.  

நான் புதிய பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். விடைபெறுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் சில நேரங்களில் அது தவிர்க்க முடியாதது. அர்ஜூன் என்ற கதாப்பாத்திரம் என் இதயத்துக்கு நெருக்கமானது. 

உங்களது எல்லையற்ற அன்புக்கும் தொடர்ச்சியாக நீங்கள் அளித்த ஆதரவுக்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை. நான் தொடர்ந்து உங்களை மகிழ்விப்பேன். எப்பொழுதும் உங்கள் அன்பும் ஆதரவும் தேவை'' என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டும் மாநாடு: பிரேமலதா

சென்னையில் 2 மாதங்களுக்குள் வருகிறது டபுள் டக்கர் பேருந்து?

பிரசாரம், சாலை வலம்: வழிகாட்டு விதிமுறைகளை தாக்கல் செய்தது தமிழக அரசு!

தனியார் குடோனுக்குள் நுழைந்த சிறுத்தை! நூலிழையில் உயிர்தப்பிய காவலாளி! | Coimbatore

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT