கடந்த ஜனவரி மாதம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர். அவர்களின் பிரிவுக்கு காரணமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தற்போது வாத்தி படத்தின் படப்பிற்காக தனுஷும், பாடல் ஒன்றின் படப்பிடிப்புக்காக ஐஸ்வர்யாவும் ஹைதராபாத்தில்தான் இருக்கின்றனர். இருவரையும் இணைக்க, இரு தரப்பு பெற்றோர்களும் முயற்சித்ததாகவும் ஆனால் அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது சென்னையில் இருவருக்கும் நெருக்கமான ஒருவரின் விருந்து நிகழ்ச்சியில் தனுஷும் ஐஸ்வர்யாவும் கலந்துகொண்டார்களாம். இருவரும் நிகழ்ச்சியில் பேசிவிடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் யாரோ போல் நடந்துகொண்டார்களாம். இது அங்கிருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.