செய்திகள்

''விக்னேஷ் சிவன் - நயன்தாராவை கைது பண்ணுங்க'': பரபரப்பு புகார்

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

DIN

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் சென்ன காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ''நடிகர் அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் 'ஏகே 62' பட அறிவிப்பை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தினர் பட்டாசு வெடித்து கொண்டியுள்ளனர். 

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் பட நிறுவனம்தான் ரௌடி பிக்சர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. ரௌடிகளை ஒழிக்க, தமிழக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

ஆனால் சமூக பொறுப்பில்லாமல் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும், ரௌடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ரௌடி பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் நடத்துகின்றனர். இதன் காரணமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கைது செய்ய வேண்டும். ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்'' என்று அவரது புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

பொறியாளர்கள் பணிக்கான தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

பழந்தமிழரின் காலநிலை அறிவு!

SCROLL FOR NEXT