செய்திகள்

இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த பட ஹீரோ இவர்தான்

இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தின் கதாநாயகன் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

DIN

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்ஜேசூர்யா இணைந்து நடித்த 'மாநாடு' கடந்த ஆண்டு நவம்பரில் வெளியாகி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது. நடிகர் சிம்புவுக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமைந்தது. 

மாநாடு படம் தாமதமானதால் அந்த இடைவேளையில் இயக்குநர் வெங்கட் பிரபு 'மன்மத லீலை' என்ற படத்தை இயக்கியிருந்தார். அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். 

இதனையடுத்து வெங்கட் பிரபு அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்குகிறார். இது வெங்கட் பிரபுவின் முதல் நேரடி தெலுங்கு படமாகும். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நாயகனாக நடிக்கவிருக்கிறார். இதற்கான முன்கட்ட தயாரிப்பு பணிகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் சிம்புவுக்கு 'மாநாடு' படத்தைப் போல, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் படம் நாக சைதன்யாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் தமிழிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் காலமானார்

ரஷியாவின் எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியா சம்மதம்.. மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்கா!

கன்னி ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்

கருத்துக் கணிப்புகளை கடந்து அதிக இடங்களில் திமுக வெற்றிபெறும்: அன்பில் மகேஸ்

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

SCROLL FOR NEXT