முகப்பு
செய்திகள்

பத்தல பத்தல பாடல் விவகாரம்: ராஜ்கமல் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

கமலின் விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடல் விவகாரம் தொடர்பாக ராஜ்கமல் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:16 AM
பகிர்:

கமலின் விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடல் விவகாரம் தொடர்பாக ராஜ்கமல் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கமல் படத்திற்கு முதல்முறையாக அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடிய 'பத்தல... பத்தல...' எனும் பாடல் மே 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகிறது. 

இதனிடையே பத்தல... பத்தல பாடல் வரிகைகள் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வரிகளை 2 நாள்களில் நீக்கி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் ராஜ்கமல் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →