செய்திகள்

பா.ரஞ்சித் படத்துக்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமுடன் கைகோர்க்கும் பிரபலம்

இயக்குநர் பா.ரஞ்சித் படத்துக்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமுடன் பிரபல நடிகர் இணைந்து நடிக்கவிருக்கிறார். 

DIN

இயக்குநர் பா.ரஞ்சித் படத்துக்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமுடன் பிரபல நடிகர் இணைந்து நடிக்கவிருக்கிறார். 

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் இதில் நடிகர் பசுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். விக்ரமும் பசுபதியும் இணைந்து தூள், மஜா, அருள், பத்து எண்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கவிருக்கின்றனர். மேலும் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரையிலும் பசுபதி கலக்கியிருப்பார். 

மேலும் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா மோகனனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கேஜிஎஃப்பில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்பைடாயகக் கொண்டு இந்தப் படம் உருவாகிவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT