செய்திகள்

பா.ரஞ்சித் படத்துக்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமுடன் கைகோர்க்கும் பிரபலம்

DIN

இயக்குநர் பா.ரஞ்சித் படத்துக்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமுடன் பிரபல நடிகர் இணைந்து நடிக்கவிருக்கிறார். 

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் இதில் நடிகர் பசுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். விக்ரமும் பசுபதியும் இணைந்து தூள், மஜா, அருள், பத்து எண்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கவிருக்கின்றனர். மேலும் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரையிலும் பசுபதி கலக்கியிருப்பார். 

மேலும் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா மோகனனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கேஜிஎஃப்பில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்பைடாயகக் கொண்டு இந்தப் படம் உருவாகிவருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT