முகப்பு
செய்திகள்

அரசியலுக்கு வரும் பிரபல நடிகர்?

அரசியல் கட்சியில் இணைவது குறித்து பிரபல நடிகர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
பகிர்:


அரசியல் கட்சியில் இணைவது குறித்து பிரபல நடிகர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ், கன்னட மொழிகளில் பிரபல நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். ’நான் ஈ’ படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பான் இந்திய திரைப்படமான 'விக்ராந்த் ரோனா’ வசூலைக் குவித்தது.

இந்நிலையில், கர்நாடகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் நடிகர் சுதீப் அரசியல் கட்சியில் இணைவார் எனத் தகவல் வெளியானது. 

இதுகுறித்து சுதீப் பேசும்போது, ‘அனைத்து அரசியல் தலைவர்களும் என் நண்பர்கள். அவர்களின் கட்சியில் இணையச் சொல்லி என்னை அழைத்தது உண்மைதான். அரசியலுக்கும் வரமாலேயே நல்லது செய்யமுடியும் என்பதால் நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்பதைக் குறித்து யோசிக்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →