செய்திகள்

'இயக்குநர் ராஜமௌலி செய்த தவறு இதுதான்...’- நடிகை கங்கனா ரணாவத்! 

DIN

ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குநர் ராஜமௌலி மதம் பற்றி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது.நடிகா்கள் ராம் சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

தி நியூ யார்க்கர் பேட்டியில் ராஜமௌலி “எனக்கும் கடவுள் நம்பிக்கையில்லை. ஆனால் என்னுடைய கருத்தை படத்தில் திணிக்க விரும்பமாட்டேன். சினிமா வணிக ரீதியிலானது. மக்கள் விரும்புகிறார்கள் அதனால் அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். அது என் வேலை அவ்வளவே. நான் கடவுள் நம்பிக்கையற்றவன். மதம் என்பது சுரண்டல் தன்மையுடையது...” எனக் கூறியிருந்தார். 

இந்தக் கருத்துக்கு பல்ரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். கங்கனா கூறியதாவது: 

உலகம் அவர் மீது விமர்சனம் வைக்கும் அளவுக்கு அவர் என்ன செய்துவிட்டார்?தயவு செய்து சொல்லுங்கள். நமது தொலைந்து போன நாகரீகத்தை பாகுபலி படமாக எடுத்ததற்காவா? அல்லது ஆர்ஆர்ஆர் போன்ற தேசியவாத படத்தினை எடுத்ததற்காவா? சர்வதேச சிவப்பு கம்பள வரவேற்பில் வேஷ்டி சட்டை அணிந்ததற்காவா? 

அவர் என்ன தவறு செய்தார் தெரியும். அவர் இந்த நாட்டினை காதலிக்கிறார். உள்ளூர் சினிமாவை உலக சினிமாவிற்கு கொண்டு சென்றார். அவர் இந்த நாட்டிற்கு அர்பணிப்புடன் இருந்துள்ளார். அதுதான் அவர் செய்த தவறு. ஆனால் எவ்வளவு தைரியம் இருந்தால் இந்த நாட்டிலுள்ளவர்கள் அவரது நேர்மையை கேள்வி கேட்கலாம்? உங்களுக்கு அசிங்கமாக இல்லையா. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

SCROLL FOR NEXT