தளபதி 68 அப்டேட் சும்மா தெறிக்கும்: வெங்கட் பிரபு
நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்தின் அப்டேட் தெறியாக இருக்குமென இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த மாநாடு படத்தினை இயக்கிய வெங்கட் பிரபுவிற்கு அடுத்தப் படமான கஸ்டடி மோசமான விம்ர்சனங்களை சந்தித்தது. அடுத்து நடிகர் விஜய்யுடன் தளபதி68 படத்தினை இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் மூலம் விஜய்யுடன் வெங்கட்பிரபு முதன்முறையாகவும், அதே சமயம் யுவன்சங்கர் ராஜா இரண்டாவது முறையாகவும் கூட்டணி அமைக்க உள்ளனர்.
இந்நிலையில் இன்று வெங்கட் பிரபு நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் அப்டேட்டினை வெளியிட்டார். விஜய் பட அப்டேட் என நினைத்து காத்திருந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஏமாற்றமடைந்த ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்தபோது அதற்கு இயக்குநர் வெங்கட் பிரபு, “தளபதி 68 சும்மா தெறிக்கும். காத்திருங்கள்” என பதிலளித்துள்ளார்.
விஜய் தற்போது லியோ படப்பிடிப்பினை முடித்து சுற்றுலா சென்றுள்ளார். லியோ திரைப்படம் அக்.19ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.