நடிகர் ரஜினி - இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர், லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்குப் பின் ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
அப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல்.
இதையும் படிக்க: பழிவாங்கும் கதையில் பலியானவர்கள்.. ரெஜினா - திரைவிமர்சனம்
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இதில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்க நடிகர் விக்ரமிடம் படத்தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.