செய்திகள்

ஹமாஸுக்கு ஆதரவளித்ததால் வருவாயை இழந்த மியா கலிஃபா! 

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பதிவிட்டதால் பிரபல நடிகை மியா கலிஃபாவுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும் பலரும் அவரை மோசமாக விமர்சித்து வருகிறார்கள். 

DIN

லெபனானில் பிறந்து வளர்ந்த மியா கலிஃபா 2001 முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பாலியல் நடிகையாக குறுகிய காலங்களில் மிகவும் புகழ்பெற்ற இவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழுவினர் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்ததால் உலக அளவில் புகழ் பெற்றார் மியா. 

தற்போது பாலியல் நடிப்பினை கைவிட்டு சமூக வலைதளப் பிரபலமாகவும் வெப் கேம் மாடலாகவும் மற்றும் விளையாட்டு வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதி காஸா. காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் தன்னாட்சி செய்து வருகின்றனர். இஸ்ரேல் இந்த அமைப்பை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. தற்போது  ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலால் இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் நடிகை மியா கலிஃபா பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ‘ப்ளே பாய்’ எனும் பாட்காஸ்ட் மியாவுடனான தனது ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும் கனடா புராட்கேஸ்டர் டாட் செபிரோ மியாவுடனான தனது ஒப்பந்தத்தையும் முறித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலுக்கு ஆதரவளித்த மியாவுக்கு சமூக வலைதளங்களில் மக்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இதற்கு மியா கலிஃபா, “பாலஸ்தீன மக்களின் சூழ்நிலையை பார்த்தும் அவர்கள் பக்கம் நிற்கவில்லை என்றால் நீங்கள்தான் தவறான பக்கத்தில் நிற்கிறீர்கள் என அர்த்தம். வரலாறு இதை உங்களுக்கு உணர்த்தும் காலம் விரைவில் வரும்” எனக் கூறியுள்ளார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்ற தீபம்! சநாதன தர்மத்தின் மீது திமுக அரசுக்கு விரோதம்: அண்ணாமலை

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தில்லி பயணம்! காரணம் என்ன?

16 வயதுக்குட்பட்டோரின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காவிடில் அபராதம்!

திருப்பரங்குன்றம் மலைப் பாதையில் சூடமேற்றி கலைந்து சென்ற இந்து அமைப்பினர்!

தமிழ்நாட்டில் திருக்கார்த்திகை கோலாகலம்!

SCROLL FOR NEXT