செய்திகள்

முன்னாள் கணவருடன் இணைந்து பணியாற்ற தயார்: சோனியா அகர்வால்

DIN

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2006-ல் வெளியான புதுப்பேட்டை இன்று வரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்றாக இருக்கிறது.

படம் வெளியானபோது வசூல் ரீதியாக தோல்விப்படமாக அமைந்தது. ஆனால், இப்போதும் விமர்சகர்கள் மத்தியில் தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சமீபத்தில், செல்வராகவன் எக்ஸ் தளத்தில், “இந்த ஆண்டு புதுப்பேட்டை - 2 நிகழும் என நம்புகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். இதனால், புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், புதுப்பேட்டை படத்தில் நாயகியாக நடித்திருந்த சோனியா அகர்வால் புதுப்பேட்டை - 2 படத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், நடிப்பது தன் தொழில் என்றும் முன்னாள் கணவருடன் இணைந்து பணியாற்றுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

செல்வராகவனும் சோனியா அகர்வாலும் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டர். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2008-ல் விவாகரத்து பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT