செய்திகள்

’பவதா..’ கடைசி புகைப்படத்தைப் பகிர்ந்த வெங்கட் பிரபு!

DIN

இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி (47) உடல்நலக் குறைவு காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (ஜன.25) உயிரிழந்தாா். 

அவரது உடலை, இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமம், லோயா்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே இளையராஜா கட்டியுள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்தில் நல்லடக்கம் செய்தனர். 

நல்லடக்கம் செய்வதற்கு முன், பவதாரிணி பாடிய ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலைக் குடும்பத்தினர் பாடினர். அதில், இளையராஜாவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிலர் இணைந்து பாடிய இப்பாடல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இயக்குநரும் பவதாரணியின் சகோதரருமான வெங்கட் பிரபு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நாங்கள் எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படம்” என பவதாரணியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில், பவதாரணிக்கு வெங்கட் பிரபு அன்பாக முத்தம் தருகிறார். இந்தப் படத்தைப் பார்த்த பலரும் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மற்றுமொரு நாள்! ஈஷா ரெப்பா..

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்!

ஸ்லோவாக்கியா பிரதமருக்கு நினைவு திரும்பியது

‘கேக் காதலி’ அனசுயா பரத்வாஜ்...!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் போலீசில் புகார்!

SCROLL FOR NEXT