முகப்பு
செய்திகள்

கல்கி போஸ்டருடன் திஷா பதானியை பாராட்டிய சமந்தா!

பிரபல நடிகை சமந்தா கல்கி படத்தின் போஸ்டரை பகிர்ந்து திஷா பதானியை வாழ்த்தியுள்ளார்.

Updated On : 13 ஜூன் 2024, 6:07 pm IST
பகிர்:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

தற்போது ‘மா இண்டி பங்காரம்’ படத்தில் நடித்து வருகிறார். சக நடிகைகளை பாராட்டுவதிலும் உற்சாகப்படுத்துவதிலும் சமந்தாவுக்கு முதலிடம் என்றே சொல்லலாம்.

பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'கல்கி 2898ஏடி' திரப்படத்தின் டிரைலர் ஜூன் 10ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பிரபாஸுடன் கமல்ஹாசனும் அமிதாப் பச்சனும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை திஷா பதானியும் நடித்துள்ளார். அவரது பிறந்தநாளுக்கு படக்குழு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியது.

நடிகை சமந்தா இந்தப் போஸ்டரைப் பகிர்ந்து, “பிறந்தநாள் வாழ்த்துகள் மிகவும் கவர்ச்சிகரமான திஷா பதானி. உங்களது சண்டைக் காட்சிகளைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். இது எப்படி முடிந்தது என தயவுசெய்து விளக்குங்கள்” என வியந்து பாராட்டியுள்ளார்.

திஷா பதானியின் உடல் கட்டமைப்பு பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. நடிகை சமந்தாவும் யசோதா படத்தில் சண்டைக் காட்சிகளில் கலக்கியிருப்பார். உடல் நலத்திலும் கவனம் செலுத்தும் சமந்தா, திஷா பதானியை பாராட்டுவது ஆரோக்கியமான விஷயமென்றே பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments