முகப்பு
செய்திகள்

பிறந்தநாளுக்காக பாலி தீவுக்குச் சென்ற எதிர்நீச்சல் நடிகை!

பிறந்தநாளையொட்டி பாலி தீவுக்கு நண்பர்களுடன் சென்றுள்ள புகைப்படங்களை மதுமிதா பகிர்ந்துள்ளார்.

Updated On : 26 மார்ச் 2024, 4:57 pm IST
பகிர்:

எதிர்நீச்சல் தொடரின் நாயகி நடிகை மதுமிதா தனது பிறந்தநாளையொட்டி நண்பர்களுடன் பாலி தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.

பிறந்த நாளுக்கு சில நாள்களுக்கு முன்பே இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், நடிகை மதுமிதாவுக்கு அவரின் நண்பர்கள் கேக் வெட்டி முன்கூட்டியே பிறந்தநாளைக் கொண்டாடினர்.

தற்போது பிறந்தநாளையொட்டி மதுமிதாவை, இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு நண்பர்கள் அழைத்துச்சென்றுள்ளனர்.

Advertisement

Advertisement

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்னும் முதன்மை பாத்திரத்தில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார்.

தெலுங்கு மொழியில் நடித்த தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது தமிழ் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். தமிழிலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.

சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய மதுமிதா, அவ்வபோது நண்பர்களுடனும் சக கலைஞர்களுடனும் புகைப்படங்கள், விடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

இதனிடையே தற்போது பிறந்தநாளையொட்டி பாலி தீவுக்கு நண்பர்களுடன் சென்றுள்ள புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவருடன் புதுவசந்தம் தொடரில் நடித்துவரும் நடிகை வைஷ்ணவியும் சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு படகு சவாரி செய்வது போன்ற படங்களை அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தோனேஷியாவுக்கு பயணம் சென்றுள்ளதால், எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனுக்குத் தெரியாமல் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளதாகவும், படப்பிடிப்புக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளதாக ரசிகர்கள் கேலியாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments