அமரன் படக் குழுவுக்கு சிவக்குமார், சூர்யா பாராட்டு!
அமரன் திரைப்படத்தை நடிகர் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா பார்த்தனர்.
அமரன் திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.
மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட அமரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
கமல்ஹாசன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் அமரன் திரைப்படத்தை பார்த்த பின், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பாராட்டினர்.
இதுகுறித்து ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவில்,
“பழம்பெரும் நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் அமரன் திரைப்படத்தை பார்த்து பாராட்டியதற்கு நன்றி.
தைரியம் மற்றும் அன்பின் கதையை நாங்கள் பகிர்ந்து கொள்ளும்போது, உங்களின் ஊக்கம் மேலும் உத்வேகம் அளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளனர்.
இதனிடையே, உலகளவில் அமரன் திரைப்படம் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.