நடிகர், தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்!
தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மறைவு...
பிரபல தயாரிப்பாளர் மோகன் நடராஜன் (71) உடல்நலக்குறைவால் காலமானார்.
மகாநதி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மோகன் நடராஜன்.
நடிகராக மட்டுமல்லாது ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். பூக்களைப் பறிக்காதீர்கள் என்ற திரைப்படம் அவரின் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, நடிகர் விஜய்யின் கண்ணுக்குள் நிலவு, அஜித்தின் ஆழ்வார், சூர்யாவின் வேல், விகர்மின் தெய்வத் திருமகன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர்.
சில நாள்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மோகன் நடராஜன் நேற்றிரவு (செப். 3) சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.