தயாரிப்பாளர் மோகன் நடராஜன். 
செய்திகள்

நடிகர், தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்!

தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மறைவு...

DIN

பிரபல தயாரிப்பாளர் மோகன் நடராஜன் (71) உடல்நலக்குறைவால் காலமானார்.

மகாநதி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மோகன் நடராஜன்.

நடிகராக மட்டுமல்லாது ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். பூக்களைப் பறிக்காதீர்கள் என்ற திரைப்படம் அவரின் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம்.

தொடர்ந்து, நடிகர் விஜய்யின் கண்ணுக்குள் நிலவு, அஜித்தின் ஆழ்வார், சூர்யாவின் வேல், விகர்மின் தெய்வத் திருமகன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர்.

சில நாள்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மோகன் நடராஜன் நேற்றிரவு (செப். 3) சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கத் தொடங்கிய ‘மோந்தா' புயல்!

ராஜாவை தூக்கி எறிந்த ஹிகாருவுக்கு பதிலடி கொடுத்த குகேஷ்!

பெங்களூரில் பைக்கில் மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த கார்: மாயமான சின்ன திரை நடிகை பிடிபட்டார்!

SIR பணிக்கு திமுக ஏன் பயப்படுகிறது? | செய்திகள்: சில வரிகளில் | 28.10.25

ஆஸி.க்கு எதிரான போட்டிகளில் பவர்பிளே ஓவர்கள் மிகவும் முக்கியம்: சூர்யகுமார் யாதவ்

SCROLL FOR NEXT