எல்லா நடிகர்களுக்கும் அம்மா... கவியூர் பொன்னம்மா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!
மறைந்த நடிகை கவியூர் பொன்னம்மாவுக்கு நடிகர் கமல் இரங்கல்...
பிரபல மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவின் மூத்த நடிகையான கவியூர் பொன்னம்மா உடல் நலக்குறைவால் கேரளத்தில் நேற்று முன்தினம் (செப். 20) காலமானார்.
இவரது மறைவுக்கு மலையாளத் திரையுலகினர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இரங்கல் குறிப்பை பகிர்ந்துள்ளார்.
அதில், 'எல்லா நடிகர்களுக்கும் அம்மா' என்று செல்லப் பெயரெடுத்தவர் மலையாளத் திரையின் சிறந்த குணச்சித்திர நடிப்புக் கலைஞரான கவியூர் பொன்னம்மா. அவரது நடிப்புத் திறத்தால் அவரைத் தமிழ்த் திரைக்கும் (சத்யா) அழைத்து வந்தோம்.
தன் 13 ஆம் வயதில் மேடை நாடகக் கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப் பயணம், சினிமா, சீரியல், விளம்பரங்கள் என்று தொடர்ந்தது.
'அம்மா' கவியூர் பொன்னம்மா இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்துகிறது. அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவிக்கிறேன். அன்னாருக்கென் அஞ்சலி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.