வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்!
வேடன் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வந்துள்ளன...
பிரபல ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர்.
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமானவர் ராப் பாடகர் வேடன். வேற்றுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பாடி வருவதால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. சுயாதீன பாடகராக மட்டமல்லாமல் திரைப்படங்களிலும் பாடி வருகிறார்.
சில நாள்களுக்கு முன், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வேடன் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் மருத்துவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த வழக்கிற்காக வேடன் முன்ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார். அந்த விசாரணை இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில், வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைப் புகாரை அளித்துள்ளனர்.
அதில் ஒரு பெண் இசை விவாதம் செய்வதற்காகக் கொச்சிக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மற்றொரு பெண் வேடனின் இசையால் ஈர்க்கப்பட்ட தன்னை வேடன் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இது வேடன் ரசிகர்களிடையையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து பாலியல் புகார்களைச் சந்திப்பதால் மலையாள திரைத்துறையினரிடம் சலசலப்பு எற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய பட போஸ்டர்!
rap singer vedan had faces two more sexual allegations
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.