மம்மூட்டியின் களம்காவல்! கேரளத்தில் கூடுதலாக 100 திரைகள் ஒதுக்கீடு!
'களம்காவல்' திரைப்படத்துக்கு 360-க்கும் அதிகமான திரைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து...
நடிகர் மம்மூட்டியின் “களம்காவல்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், கேரளத்தில் 360-க்கும் அதிகமான திரைகளில் திரையிடப்படுகிறது.
நடிகர்கள் மம்மூட்டி மற்றும் விநாயகன் ஆகியோர் நடிப்பில் உருவான “களம்காவல்” திரைப்படம் நேற்று (டிச. 5) திரையரங்குகளில் வெளியானது. c
துல்கர் சல்மானின் ‘குரூப்’ திரைப்படத்தின் எழுத்தாளர் ஜிதின் கே. ஜோஸ் இயக்கத்தில் க்ரைம் திரில்லராக உருவான இந்தப் படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், வெறும் ஒரு மணிநேரத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.
இந்த நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து வரவேற்பு அளித்து வரும் நிலையில், களம்காவல் திரைப்படத்திற்கு ஒதுக்கப்பட்ட 260 திரைகள் 365 ஆக அதிகரித்துள்ளதாக, நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஆச்சரியப்படுத்தும் துரந்தர் பட முதல்நாள் வசூல்!
Actor Mammootty's film "Kalamkaval" has received a good response and is being screened on more than 360 screens in Kerala.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.