முகப்பு
செய்திகள்

மீண்டும் மாகாபா உடன் இணையும் செளந்தர்யா!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகை செளந்தர்யா மாகாபா நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

Updated On : 4 பிப்ரவரி, 2025 at 3:52 PM
செளந்தர்யா - இன்ஸ்டாகிராம்
பகிர்:
Updated On : 4 பிப்ரவரி, 2025 at 3:47 PM

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகை செளந்தர்யா மாகாபா நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

Updated On : 4 பிப்ரவரி, 2025 at 3:47 PM

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாகாபா கேள்வி கேட்கும் டாஸ்க்கில் செளந்தர்யா பங்கேற்றிருந்த நிலையில், தற்போது முழு நேர நிகழ்ச்சியில் செளந்தர்யா கலந்துகொண்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் முத்துக்குமரன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு அடுத்த இடத்தை செளந்தர்யா தக்கவைத்துக்கொண்டார்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே சில இணையத் தொடர்களிலும் பாடல்களிலும் செளந்தர்யா நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் செளந்தர்யா
Updated On : 4 பிப்ரவரி, 2025 at 3:49 PM

அடுத்தடுத்த புதிய வாய்ப்புகளில் செளந்தர்யா கவனம் செலுத்திவரும் நிலையில், விஜய் தொலைக்காட்சியில் மாகாபா ஆனந்த் நடத்தும் கம்பெனி நிகழ்ச்சியில் செளந்தர்யா பங்கேற்றுள்ளார். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

மாகாபா ஆனந்த் - செளந்தர்யா - இன்ஸ்டாகிராம்

அதில் மாகாபா ஆனந்த் மற்றும் சக பிரபலங்களுடன் செளந்தர்யா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற செளந்தர்யா, தற்போது எங்குச் சென்றாலும் அதனை அவரின் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க | எதிர்நீச்சல் நடிகைகளுக்கு குவியும் அடுத்தடுத்த வாய்ப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.