ஓடிடியில் வெளியான ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடர்!
தி ஹண்ட் தொடர் வெளியானது...
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ஹண்ட் தொடர் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்பதூரில் குண்டுவெடிப்பின் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
நாட்டையே உலுக்கிய இந்த சதிச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை இந்திய உளவுத்துறை எப்படி கண்டுபிடித்தனர் என்பதை மையமாகக் கொண்டு தி ஹண்ட் (the hunt) என்கிற பெயரில் இணையத் தொடர் உருவாகியுள்ளது.
Advertisement
இயக்குநர் நாகேஷ் குகுநூர் இயக்கத்தில் அமித் சியால், சஹில் வைத், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில் தயாரான இத்தொடர் இன்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?
former prime minister late rajiv gandhi assassination case web series out in sony liv ott