மறுவெளியீடானது பாட்ஷா திரைப்படம்..! இயக்குநர் கூறியதென்ன?
நடிகர் ரஜினியின் பாட்ஷா திரைப்படம் மறுவெளியீடு குறித்து...
நடிகர் ரஜினி நடிப்பில் உருவான பாட்ஷா திரைப்படம் இன்று திரையரங்குகளில் மறுவெளியீடானது.
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.
தேவா இசையில் அனைத்து பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் ரகுவரன், நக்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
Advertisement
Advertisement
இன்றுமுதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ள பாட்ஷா படத்தை சென்னையில் பிவிஆர் அரங்குகளில் ரசிகர்கள் காணலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படம் குறித்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, “டியர் ரஜினி சார், பாட்ஷா உங்களால்தான் உருவானது. உங்களின் துள்ளலான நடிப்பு... உன்னதமான திரை அனுபவம்...
நீங்கள் பாட்ஷாவாக நடிக்கவில்லை, வாழ்ந்தீர்கள். கல்ட் கிளாசிக்காக சினிமா வரலாற்றில் எப்போதும் நீடிக்கும்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் படத்தின் மறுவெளியீடு குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், “மக்களால் கொண்டாடப்பட்ட பாட்ஷா திரைப்படம் இன்று அற்புதமான புதிய வடிவத்தில் திரையரங்குகளுக்குத் திரும்ப வருகிறது.
மறக்க முடியாத சினிமா அனுபவத்தை இது வழங்கும் - அடோம்ஸில் முழு ஒலிப்பதிவையும் மீண்டும் உருவாக்கி முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது!” எனக் கூறியுள்ளது.
ரஜினி கூலி படத்தில் நடித்து முடித்து, ஜெயிலர் -2 படத்தில் நடித்து வருகிறார்.
The film Baadshah, starring actor Rajinikanth, was re-released in theaters today.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.