இலங்கை சென்ற சிவகார்த்திகேயன்.  படம்: எக்ஸ் / ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
செய்திகள்

பராசக்தி படப்பிடிப்பு: இலங்கை சென்ற சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படப்பிடிப்பு குறித்த அப்டேட்...

DIN

நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக இலங்கை சென்றடைந்துள்ளார்.

அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடியில் நடைபெற்றது. தொடர்ந்து, மதுரையில் சில நாள்கள் படப்பிடிப்பை நடத்தினர்.

பின், முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்ததாக சுதா கொங்காரா தெரிவித்திருந்தார்.

யாழ்பாண நூலகம் எரிந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் விதமான காட்சிகளை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தங்களது அதிகாரபூர்வ பக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்கள்.

அந்தப் பதிவில்,“தென்னிந்தியாவின் சினிமா நடிகர் சிவகார்த்திகேயனை வரவேற்பத்தில் மகிழ்ச்சியடைகிறோம். சென்னை - கொழும்புவிற்கு செல்ல ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை உபயோகித்ததுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். இதில் அதர்வா, ஸ்ரீ லீலா, பிரீத்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமரின் பயணம்.. வளர்ச்சியின் புதிய அத்தியாயம்: ஒடிசா முதல்வர்!

ரெளடி டைம்! என்ன சொல்கிறார் உதயநிதி!

இதய மாற்று சிகிச்சைக்கு வந்தே பாரத் ரயிலில் வந்த சிறுமி! திக் திக் நிமிடங்கள்!!

கொள்கையில்லாமல் கூக்குரலிட்டு, கும்மாளம் போடும் கூட்டமல்ல திமுக! மு.க. ஸ்டாலின் கடிதம் - முழுமையாக...

ஷ்யாம் புஷ்கரன் எழுத்தில் கமல் 237..! மகிழ்ச்சியில் அன்பறிவ் சகோதரர்கள்!

SCROLL FOR NEXT