3 நாள்களில் ரூ. 235 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் -1
காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் வெளியான 3 நாள்களில் ரூ. 235 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் வெளியான 3 நாள்களில் ரூ. 235 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் -1 திரைப்படம், அக். 2ஆம் தேதி வெளியானது.
ருக்மினி வசந்த் நாயகியாக நடித்திருக்கும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த இரண்டு நாள்களில் ரூ. 150 கோடி வரை வசூலித்திருந்தது. ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் திரையரங்குகள் அதிகமாக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாள்களில் ஹவுஸ்புல்லாக படம் ஓடிக்கொண்டிருப்பதால், கடந்த மூன்று நாள்களில் மட்டும் 235 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | எளிய பின்னணியில் இருந்து பிக் பாஸ் சென்ற ரம்யா ஜோ! யார் இவர்?
Kantara Chapter-1 collects Rs. 235 crores in 3 days
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.