முகப்பு
செய்திகள்

மா இன்டி பங்காரம்: இயக்குநர் நந்தினியுடன் 3வது முறையாக இணையும் சமந்தா!

ஓ பேபி, ஜபர்தஸ்த் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் நந்தினியுடன் 3வது முறையாக நடிகை சமந்தா இணைந்துள்ளது குறித்து..

Updated On : 29 அக்டோபர் 2025, 12:14 pm IST
மா இன்டி பங்காரம் பட பூஜையில்... - படம் - இன்ஸ்டாகிராம் / tralala
பகிர்:

ஓ பேபி, ஜபர்தஸ்த் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் நந்தினியுடன் 3வது முறையாக நடிகை சமந்தா இணைந்துள்ளார்.

இம்முறை மிகவும் மாறுபட்ட கதைக்களத்தில், அதிரடிக் காட்சிகளுடன் படம் உருவாகவுள்ளதால், சமந்தாவுக்கான நட்சத்திரத் தகுதியை முழுமையாக நிறைவு செய்யும் படமாக மா இன்டி பங்காரம் இருக்கும் என இயக்குநர் நந்தினி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த சமந்தா, 2022ஆம் ஆண்டு மயோசிடிஸ் என்னும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

Advertisement

Advertisement

சிகிச்சை முடிந்து திரும்பிய சமந்தா, 2024-ல் சிடாடல் என்ற இணையத் தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் சினிமா தனது வருகையைப் பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து மா இன்டி பங்காரம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் சமந்தா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 22ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை இயக்குநர் நந்தினி இயக்குகிறார்.

இதற்கு முன்பு ஓ பேபி, ஜபர்தஸ்த் ஆகிய படங்களில் நந்தினியும் சம்ந்தாவும் ஒன்றாகப் பணிபுரிந்த நிலையில், தற்போது 3வது முறையாக இணைந்துள்ளனர்.

மா இன்டி பங்காரம் போஸ்டர் - படம் - இன்ஸ்டாகிராம் / tralala

இது தொடர்பாக இயக்குநர் நந்தினி பேசியதாவது, சமந்தாவுடன் பணிபுரிவது எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று. இம்முறை மாறுபட்ட களத்தில் சமந்தாவைப் பார்க்கப்போகிறோம். இக்கதை சமந்தாவின் நட்சத்திர தகுதியை முழுமையாக பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | நீங்கள்தான் மாரி அந்த பைசன்: மணிரத்னம்

summary

Samantha Nandini Reddy Reunite for Maa Inti Bangaram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments