முகப்பு
செய்திகள்

ரத்னகுமாரின் ‘29’ படப்பிடிப்பு நிறைவு..! எல்சியூவில் வருகிறதா?

ரத்னகுமார் இயக்கிவந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது குறித்து...

Updated On : 30 ஜனவரி, 2026 at 6:45 AM
29 படத்தின் படக்குழுவினர்.
பகிர்:

மேயாத மான் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ரத்னகுமார் இயக்கிவந்த 29 என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டுத் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளதால் இது எல்சியூவில் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

29 எனப் பெயரிட்ட இந்தப் பட டீசரின் காட்சிகளைப் பார்க்கும்போது 29 வயது ஆணின் வாழ்க்கையும், காதலுமாக இப்படத்தின் கதை இருக்கலாம் எனத் தெரிகிறது.

இப்படத்தின் நாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்கள். நடிகர் விது ஜிகர்தண்டா - 2, ரெட்ரோ திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.

இறுதியாக, ரத்னகுமார் குலு குலு திரைப்படத்தை இயக்கியிருந்தார். மாஸ்டர், லியோ ஆகிய திரைப்படங்களுக்கு வசனம், திரைக்கதை எழுத லோகேஷ் கனகராஜுக்கு உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

The shooting of the film '29', directed by Ratnakumar, who rose to fame with the film 'Meyaadha Maan', has been completed.

முழு கட்டுரையைப் படிக்க →