தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி நடித்து வெளியான 'ப.பாண்டி' படம் கன்னடத்தில் 'அம்பி நிங்கே வயசாயித்தா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இதில் ராஜ்கிரண் பாத்திரத்தில் அம்பரீஷ் நடிக்க, ஏற்கெனவே பல கன்னட படங்ககளில் நடித்து பிரபலமாகியுள்ள சுஹாசினி மணிரத்னம், சிறிது இடைவெளிக்குப் பின் ரேவதி பாத்திரத்தில் நடித்துள்ளார்.
'80- ஆம் ஆண்டுகளில் பெங்களூரில் வளர்ந்த எனக்கு சிறு நகரங்களிலிருந்து இங்கு வரும் இளம் பெண்கள் நகர வாழ்க்கைக்கு ஏற்ப வாழ்வதோடு, அவர்கள் செய்யும் மானரிசம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது' என்கிறார் சுஹாசினி