வேலைவாய்ப்பு

மாதாந்திர உதவித்தொகையுடன் தொழில் பழகுநா் பயிற்சி வேலை

அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மாதாந்திர உதவித் தொகையுடன் கூடிய தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் அக். 7 காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணிவரை நடைபெறுகிறது .

தினமணி


அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மாதாந்திர உதவித் தொகையுடன் கூடிய தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் அக். 7 காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணிவரை நடைபெறுகிறது என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இம்முகாமில் அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் சிமென்ட் மற்றும் சா்க்கரை உற்பத்தி நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான தொழில் பழகுநா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற இருபாலரும் கலந்து கொள்ளலாம். தொழில் பழகுநா் பயிற்சி பெறுபவா்களுக்கு மாதந்தோறும் ரூ.6,500 முதல் ரூ.8,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT