வேலைவாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரி வேலை: சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 145

பணி: மேலாளர்  (ரிஸ்க்) -  40
பணி: மேலாளர் (கிரடிட்) - 100

தகுதி: கணக்கு தணிக்கையாளர் (சிஏ) அல்லது ஏதாவதொரு பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்று  நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி கருவூலம் பணிக்கு 25 முதல் 37க்குள்ளும், மற்ற பணியிடங்களுக்கு 25 முதல் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம் : சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்

விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.850. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.05.2022

மேலும் முழுமையான விபரங்கள் அறிய www.pnbindia.in/Recruitments.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT