முகப்பு
வேலைவாய்ப்பு

குரூப் 4: சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் பட்டியல்!

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானவர்கள் தொடர்பாக...

Updated On : 13 நவம்பர், 2024 at 7:23 AM
பகிர்:

குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு முடிவுகள் அக். 28-ல் வெளியானது. 15.80 லட்சம் பேர் எழுதிய தேர்வின் முடிவுகள், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

கிராம நிா்வாக உதவியாளா், இளநிலை உதவியாளா் உள்பட 8,932 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்குத் தோ்வு நடைபெற்றது.

மேலும், 559 இடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9,491-ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. கணினி வழித்திரை சரிபார்ப்புக்கு டிஎன்பிஎஸ்சி இணைய தளம் மூலம் நவ. 9 முதல் 21 வரை பதிவேற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →